![Kiruba Store - Online Shopping Store in India](https://www.ariviyalpuram.com/wp-content/uploads/2021/02/kirubastore-1280x250-2.jpg)
சிம்மம், சிம்மம் (Astrological secrets) அதிபதி உயிர்களின் ஆத்மா காரகனான சூரியன் கும்பம் கும்பத்தின் அதிபதி கர்ம காரகனான சனி. அதிக ஒளி தன்மை உடைய வீடு, மற்ற வீடுகளுக்கு ஒளியை பெற செய்வதும், சூரியனே. கால புருஷனுக்கு பதினோராம் பாவத்தில் இணைந்துள்ள வீடு கும்பம் ,உண்மையில் கும்பம் மட்டுமே கடைசி பாவகமாகும் ..
அதிக இருள் தன்மை நிறைந்த இடம் கும்பம். சூரிய ஒளி படும் வீடுகள் பிரகாசமாகவும், சூரியனிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கும் கும்ப வீடு அதிக இருள் தன்மை மிகுந்ததாகவும் இருக்கும் . கும்பத்திற்குள் இருப்பது வெளியில் தெரியாது .அமானுஷங்களுடன் மர்மங்களும் நிறைந்தது கும்பம் ..
எந்த ஒரு ஆத்மாவிற்கும் நாம் கொடுக்கக்கூடிய திதி தர்ப்பணங்கள் முதலானவை ஆத்மா காரகனான சூரியன் மூலம் பெறப்பட்டு, குறிப்பிட்ட ஆத்மாவிற்கு சென்றடைகிறது அவை நாம் சேர்க்கும் நற்கர்மங்கள் இவை அனைத்தும் சிம்மத்தில் சேர்வதால் (கால புருஷனின் ஐந்தாம் பாவகமாக சிம்ம வீடு ,பூர்வ புண்ணிய ஸ்தானம் என சொல்லப்படுகிறது. சோதிடமே ஒளி தத்துவத்தின் அடிப்படையில் தான்.
![Some secrets about Leo and Aquarius - Astrological secrets Some secrets about Leo and Aquarius - Astrological secrets](https://ariviyalnews.com/wp-content/uploads/2021/09/Some-secrets-about-Leo-and-Aquarius-1024x576.jpg)
கும்பம் சொல்லப்போனால் சூரியனிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கும் ராசி கும்பம் ..சூரிய ஒளியின் மேற்பார்வையில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் ராசி கும்பம். சரி கும்பத்திற்குள் அப்படி என்னதான் இருக்கிறது .கும்பம் குடம் போன்றது குடத்தில் உள்ளது வெளியில் தெரியாது என்பதுபோல கும்பத்திற்குள் நடக்கும் அமானுஷங்களும் மர்மங்களும் வெளியில் தெரிவதில்லை .காரணம் சூரியனிடம் இருந்து வெகு தொலைவில் உள்ளது .. இதனால்தானோ என்னவோ கும்ப/லக்ன ராசிக்காரர்கள் .பெரும்பாலும் உள்ளுக்குள் இருப்பது வெளியில் தெரிவதில்லை.
கும்பம் சனியின் மூலத்திரிகோண வீடு. கர்மகாரகன் சனி. இவரின் மூலதிரிகோண வீடு .அதில் ராகுவின் சதய நட்சத்திரம் முழுமையான ஆட்சி வீடு. சனி ராகு இருவருமே கர்ம கிரகங்கள் கர்மக் கணக்குகளை முழுமையாக நிர்வகிக்கின்றன ..இங்கே குருவின் பூரட்டாதி மற்றும் செவ்வாயின் அவிட்டம். இந்த இரண்டு நட்சத்திரத்திற்கும் கேதுவிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. கர்ம கணக்குகளில்மோட்சத்திற்கான வழியை திறப்பவர் குரு . பெரும்பாலும் மண்ணிற்கு அடியில் கிடைக்கும் பொருட்கள் ..அகழ்வாராய்ச்சி தொல்லியல் துறையில் சாதிப்பது. போன்றவற்றில் சனி சுபத்துவம் ஆன நிலையில் கடவுளின் அருள் ஞான குருவின் சுபத்துவம் நிறைந்து உள்ளவர்களே இதில் சாதிக்கிறார்கள் ..மறைவான அல்லது கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யமான விஷயங்களைப் பற்றி ஆராய்வது கும்பத்திற்கு ஏற்ற விஷயங்களில் ஒன்று.
கும்பத்தில் சுபத்துவம் ஆன சனி. ஒருவரை விமானி ஆக்குகிறது. வானியல் சார்ந்த விஷயங்களுக்கும் கும்பமே பிரதானம் . சனியின் ஸ்திர வீடான கும்பத்தில் இருக்கும் ராகு ,பெரும்பாலும் யோகத்தை செய்வதில்லை அவ்வாறு யோகத்தைக் கொடுக்க வேண்டுமெனில், நிச்சயம் குருவின் தொடர்பை பெற்றிருத்தல் அவசியம் . ஒருவர் கர்மா மற்றும் கர்மகாரகர்களைப்பற்றி விவரிக்கிறார் அல்லது அதை உணருகிறார் என்றால், மறைவான இடத்தில் அல்லது கும்பத்துடன் குரு கேது சுபத்தமான நிலையில் தொடர்பு பெற்று இருந்தால் மட்டுமே அவர்களால் அதை உணர முடியும் . இன்னும் பல அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகள் கும்பத்தில் புதைந்துள்ளன